• Contact
  • Home
  • Support Kathir News
Saturday, December 14, 2019
No Result
View All Result
கதிர் செய்தி
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
No Result
View All Result
கதிர் செய்தி
No Result
View All Result

தமிழகத்தில் ஜூலை 18-ல் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்! ஜூலை 1-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது !

by Kathir Webdesk
June 26, 2019
in அரசியல், செய்திகள்
14
SHARES
138
VIEWS
Share on FacebookShare on TwitterWhatsappWechat

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் டி.ரத்னவேல், வி.மைத் ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், ஆர்.லட்சு மணன் ஆகிய நான்கு அதிமுக உறுப்பினர்களுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவுடைய பதவிக் காலமும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும், மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டதால், திமுக உறுப்பினர் கனிமொழி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்கெனவே ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாகவுள்ளன. இதற்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

Loading...

இதன்படி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் ஜூலை 1-ல் தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஜூலை 8-ம் தேதி கடைசி. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 9-ல் நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 11. வாக்குப் பதிவு தேவை இருப்பின் ஜூலை 18-இல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அதே நாளில் மாலை 5 மணிக்கு நடைபெறும். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூலை 22-இல் நிறைவடையும்.

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர் ஒருவர் 34 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதன்படி, பேரவையில் 123 எம்எல்ஏக்களை வைத்துள்ள அதிமுகவும், தனது எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 108 எம்எல்ஏக்களை வைத்துள்ள திமுகவும் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களை சரிபாதியாக பிரித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

மூன்று இடங்களைப் பிரித்துக் கொள்ள திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 102 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இரண்டு கட்சிகளுக்கும் தேவையான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களின் பலம் இருப்பதால் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஆறில் சரிபாதியாக தலா மூன்று இடங்களை அதிமுகவும், திமுகவும் பிரித்துக் கொள்ளும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வாக்குப் பதிவு என்பது தவிர்க்கப்படும் எனத் தெரிகிறது.

RelatedPosts

மிசாவில் ஸ்டாலின் கைதானாரா ? தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.!

October 16, 2019

நான் தமிழச்சி ! இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன்! பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்!

October 16, 2019

தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை! வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.!

October 16, 2019
Loading...
Tags: july 18Rajya Sabha elections

Tags

2019 Elections 2019 Lok Sabha Elections ADMK AIADMK Amit Shah AmitShah Arun Jaitley BJP BJP Tamil Nadu Chennai Coimbatore Congress DMK DMK Atrocities Fake News H Raja India Indian Army ISRO Jammu and Kashmir Karnataka Kashmir Kerala MK Stalin Modi Modi Government Narendra Modi Nirmala Sitharaman Pakistan P Chidambaram Piyush Goyal PM Modi PM Narendra Modi Pon Radhakrishnan Pulwama Terror Attack Rahul Gandhi Sabarimala Save Sabarimala Save Sabarimala Tradition Srilanka Supreme Court Tamilisai Soundararajan Tamil Nadu TamilNadu Uttar Pradesh

Categories

  • 2019 தேர்தல்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • ஊடக பொய்கள்
  • சமூக ஊடகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ் நாடு
  • நையாண்டி
  • விளையாட்டு
கதிர் செய்தி

© 2019 Kathirnews.com

Navigate Site

  • About
  • Advertise
  • Careers
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News

© 2019 Kathirnews.com